கோவை அவினாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இரண்டு நபராக சேர்ந்து வரும் 35வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 20% சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவு, உடல் நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே ஏதாவது ஒரு நோயின் அறிகுறிகள் வெளிப்படும் வரை, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வரை பலரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் சில நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக நிவாரணம் பெறலாம். உடல் வலி, அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். அதற்கு முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவும்.
இதுதொடர்பாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் கூறுகையில்: 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் துவக்க நிலை, முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிய முடியும்.
பல்வேறு நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய விரும்புபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது குடிப்பவர்கள், சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முழு உடல்பரிசோதனை செய்ய வேண்டும்.
பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண், பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. நோயாளியின் பழக்கவழக்கங்கள், சந்தேகங்கள், அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனைகள் விரிவடையும்.
கே.எம்.சி.ஹெச்.,ல் முழு உடல் பரிசோதனை செய்யும் 35 வயதுக்கு மேற்பட்ட இருவருக்கு 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. மே 31வரை முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மொபைல்: 87548 87568.