தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் அக்டோபர் 4, 5ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதற்கு அனுமதி கேட்டு கோவை மாவட்ட த.வெ.க.வினர் காவல் ஆணையரிடம் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் கழகத் தலைவர் விஜய், சாலை மார்க்கமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது சிவானந்த காலனி, ராஜு நாயுடு வீதி, டாடாபாத் (No.5 பேருந்து நிறுத்தம் அருகில்) ஒலிபெருக்கி மூலம் பேச உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

