கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 31வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (25.4.2025) நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் கலந்துகொண்டு ஆண்டின் சிறந்த மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் பாடல்கள் பாடி மாணவர்களை மகிழ்வித்தார். மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் சௌந்தர் ராஜன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.