ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், “சினாரியோ-2025” என்ற மாணவர் கலைத் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து “சிர்லயா” இசை வாத்தியக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார்.

SNR

அதைத்தொடர்ந்து, தனிநபர் பாடல், குழுப் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், இசைக் கருவிகள் மீட்டுதல், மௌன நாடகம், தனிநபர் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாாி ராம்குமார் வெற்றியாளர்களுக்கு பரிசுக்கோப்பை, ரொக்கப்பரிசு வழங்குகிறார்.