ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 28வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் டெல்டா ஸ்குவாட் கமாண்டர் லெப்டினென்ட் ஈசன் கலந்துகொண்டு எதிர்கால இந்தியாவாகிய மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

IMG 20240815 WA0037

கல்லூரி முதல்வர் சித்ரா பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களாகத் திகழ மாணவிகள் செய்ய வேண்டியவை பற்றி எடுத்துரைத்தார். இந்தியநாடு மற்றும் சுதந்திரப் போராட்டம் பற்றி மாணவிகள் உரை நிகழ்த்தினர். தேசிய மாணவர் படையினரின் நிகழ்ச்சியோடு விளையாட்டுத்துறையினரின் தற்காப்புக்கலையான சிலம்பம், நாட்டு நலப்பணித்திட்டத்தினரின் விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவுகூறும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.