தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பொது மக்களுக்கு தங்களது சேவைகளை விரைவாக பெரும் வகையில், ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ எனும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (26.9.2024) காமராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் தங்களது பகுதியில் உள்ள தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்தனர். ஆணையாளர் உரிய நிர்வாகிகளிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். இம்முகாம் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது.