கோவை காந்திபுரம், ஓலா விற்பனை மையத்தில் எஸ் ஒன் ப்ரோ 4680 பாரத் செல் பேட்டரி வசதியுடன் கூடிய ஓலா ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏரியா மேனேஜர் ஸ்ரீராம், ஷோரூம் மேனேஜர் சந்தோஷ் ஆகியோர் விற்பனையை தொடக்கி வைத்து கூறியதாவது:  S1 Pro+ (5.2 kWh) என்பது நிறுவனத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் முதல் தயாரிப்பு ஆகும். இது அதிக வரம்பு, அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது என்றனர்.

இதுகுறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: எஸ் 1 ப்ரோ + இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்க திட்டமிட்டதை நிரூபித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது எங்கள் சொந்த 4680 பாரத் செல் மூலம் இயக்கப்படும் ஸ்கூட்டர்களின் டெலிவரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு பேட்டரி மூலம் 300 கிலோமீட்டர் பயணிக்கலாம். அனைத்து பாதுகாப்பு வசதிகளும் புதிய வாகனத்தில் இடம்பெற்றுள்ளன எனக் கூறினார்.