– கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு

தலைகவசமின்றி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வரும் கல்லூரி மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது (c என்ற கட்டுப்பாட்டை அனைத்து கல்லூரிகளும் நடைமுறைப்படுத்தும் நோக்கிலும், இருசக்கர வாகனத்தில் பயணக்கும் பொழுது தலைகவசம் அணிய அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கிலும், கோவை மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகரத்தில் உள்ள சுமார் 25 கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.

இதில் கோவை மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் ஸ்டாலின், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து கிழக்கு காவல் உதவி ஆணையர் சேகர், நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார், போக்குவரத்து கிழக்கு காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.