கோவையில் புதுப்பிக்கப்பட்ட மிருகவதைத் தடுப்பு சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார். இதனுடன் இணைந்து ஆர்ஐடி 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்பட்டது.

