வடகோவையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், முரசொலி மாறனின் 91வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் முருகன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.