கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மூன்றாமாண்டு படிக்கும் 1411 மாணவ, மாணவியர்களுக்கு, மடிக்கணினிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வழங்கினார்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி, தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வம் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் கல்லூரி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர் நாகராஜா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.