எஸ்.என்.எஸ் நிறுவனங்கள், பெங்களூருவைச் சேர்ந்த வைஸ் வொர்க் நிறுவனத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூட்டுப் பணியிடம் வைஸ்வர்ஸ் புத்தாக்க ஸ்டுடியோவை திறந்துள்ளது.

வைஸ் வொர்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மதன் குமார் ஸ்ரீனிவாசன், எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் இந்த ஸ்டுடியோவை திறந்து வைத்தனர். இதில் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஸ்டுடியோ, மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையையும் தொழில்முனைவு மனப்பான்மையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 10 மாணவர்கள் வைஸ் வொர்க் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்புகளை பெற்று, மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தைப் பெறுகின்றனர்.

தொழில்நுட்பம், திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம், அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மாற்ற திறனைப் பற்றி மதன் குமார் ஸ்ரீனிவாசன் எடுத்துரைத்தார்.