கோவை, வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (15.8.2024) 78வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.தொடர்ந்து, வாகா ப்பெரைடு, மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.