78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புரானி காலனியில், “மஸ்ஜித் உல் குத்பி” புரானி‌ – தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ. கேப்டன் ஹூசேபா, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 27 வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தனபால், செந்தில், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.