தமிழ்நாடு கிளை இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு  சிறந்த மக்கள் சேவைக்கான மருத்துவ விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர் தின விழா மற்றும் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கிராமப்புற மருத்துவச் சேவைத் துறையின் இயக்குநர் ராஜமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகன் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த மக்களுக்கான சேவையை பாராட்டும் விழாவில், சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான மருத்துவ விருது வழங்கப்பட்டது.