மருதம் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் இன்று (24-09-2024) துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெற்றிவேல், கோ – ஆப்டெக்ஸின் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், மருதம் விற்பனை நிலையத்தின் விற்பனை மேலாளர் செல்வன், விற்பனை நிலையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.