மாநில அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நேற்று கோவை மாநகராட்சியின் பிரம்மாண்ட செம்மொழி பூங்கா வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தை சேர்ந்த ஷாக்காகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பரதநாட்டியம், கரகாட்டம், பறை இசை, வில்லுப்பாட்டு, நாடகம் என பல்வேறு கலைகளில் மாணவ,மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தி, அங்கு திரண்டிருந்த மக்களின் பாராட்டை பெற்றனர்.

