கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.

இதில் 58 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்பவர் தலைமறைவானார். 28 ஆண்டுகள் தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். இதனால் காவலர்கள் உஷார் நிலையில் இருக்குமாறு கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.