பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் 100வது ஆண்டு நிறுவன நாள் விழா 20.10.2024 ஞாற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.