மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் அக்டோபர் 27, 28ம் தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோவிலின் பேருந்து மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என துணை ஆணையர் இரா.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
