வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை, மின்னணுவியல் துறை மற்றும் கணினிப் பயன்பாட்டுத் துறை இணைந்து மென் திறன் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை  எக்ஸ்ட்ரா மைல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தலைமைப, விளக்கக் காட்சி மற்றும் மேலாண்மை குறித்தும், சவால்களை சமாளிப்பதற்கான பயனுள்ள நுட்பங்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரித் துணை முதல்வர் டாக்டர் வாசுதேவன் தலைமை ஏற்றார்.