ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா துடியலூரியில் நடந்தது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை துடியலூர் முருகன் திரையரங்கம் எதிரில் துவங்கி உள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் மற்றும் தொழிலதிபர் பொங்கலூர் பழனிசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் அன்புடன் வரவேற்றார். முதல் விற்பனையை  கோயம்பத்தூர் தொழிலதிபர் சத்தியானந்தன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் கோயம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோயம்பத்தூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ராம்ராஜ் காட்டன் ஷோரூம் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும், விமான நிலையங்களிலும் திறக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.