அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

சமீபத்தில் வெள்ளாணபட்டி பகுதி, நரசிம்மநாயக்கன்பாளையம் , சரவணம்பட்டி, குருடம்பாளையம், சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நேற்று நரசிம்மநாயக்கன்பாளையம்பாளையத்தில் உள்ள மங்கள் அக்ஷதா திருமண மண்டபத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

