2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 45 மாணவர்களைப் பாராட்டும் விழா  நடைபெற்றது.

நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகர (வடக்கு) காவல் துணை ஆணையர் தேவநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களைக் கௌரவித்தார். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மி அருண், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அருண் பேசுகையில்: தனது மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்கள் இப்போது தமிழக அரசு அதிகாரிகளாகி இருப்பதைப் பார்ப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வெற்றியாளர்கள் தங்களது பயணத்தை இதோடு நிறுத்திக்கொள்ளாமல், குரூப் 1 தேர்வையும் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்தப் பயணத்திலும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிச்சயம் துணை நிற்கும் என்று பேசினார்.

சிறப்பு விருந்தினர் தேவநாதன் பேசுகையில்: வெற்றியாளர்களையும் மாணவர்களையும் உயர்ந்த இலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார். குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்றும், அவர்கள் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

அரசு அதிகாரியாக ஒரு கோப்பில் நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் பலரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது. எனவே, எப்போதுமே ஒரு நிமிடம் சிந்தித்து சரியானதைச் செய்யுங்கள். திறமையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்கள் அரசுப் பணியில் வெற்றி பெறுவார்கள் என்று அறிவுரை வழங்கினார்.

வெற்றி பெற்ற 9 ஆசிரியர்களும் தங்களது டி.என்.பி.எஸ்.சி பயணம், தயாரான விதம், சவால்கள், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் இறுதியான வெற்றி குறித்துப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக, வெற்றியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.