கோயம்புத்தூர் மாவட்டம் பள்ளபாளையம் ( தேர்வு நிலை ) பேரூராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பிரிக்கால் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன், தலைவர் வனிதா மோகன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.