ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகி விஷ்ணு ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் சிவகுமார் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தின் மூலம், யங் இந்தியன்ஸ் அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இரு நிறுவனங்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் வகுக்கப்படும். கல்வி சார் திட்டங்கள், நிகழ்ச்சிகள், பயிற்சிகள் வழங்க வழிவகை செய்யப்படும்.

மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகள் இரு தரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்படும். அறிவுசார் சொத்துரிமை,பதிப்புரிமை, காப்புரிமை, வர்த்தக உரிமை போன்றவற்றை பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன”  என்று தெரிவித்தார்.