கோவை சரவணம்பட்டி ஆதி மாருதி ஷோரூமில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி சீனிவாசன், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், துணைத் தலைவர் (சேல்ஸ்)கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மேலும், நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ‘தன்னம்பிக்கை விருதுகள்’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.