ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர் நலச்சங்கம் அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி சதிஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர் நலச்சங்கம், அதன் சார்பு மன்றங்களைத் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில்முனைவோராக பயிற்சி பெற்றிருக்கும் மாணவர்கள் மற்றும் தனிநபர் சாதனைகளை குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்தார். எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் முன்னேற்றம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை விவரித்தார்.

கல்லூரியின் ஸ்டுடென்ட் ஆப்யர் செல் டீன் பெருமாள், ப்ரொபஷனல் சொசைட்டி பொறுப்பாளர் பேராசிரியர் மதிவாணன், அனைத்து ஸ்டூடண்ட் கிளப் பொறுப்பாளர் பேராசிரியர் பாலமுருகன், ஆறு நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆறு செயற்குழு உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.

முன்னதாக, மவுண்ட் எவரெஸ்ட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்த முன்னாள் மாணவி நௌசிதா பானு கௌரவிக்கப்பட்டார்.