ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் டி.எம். அன்பரசன் கலந்து கொண்டு “புதுமையில் ஒற்றுமை – மனித உருவாக்கம்” ரோடு ஷோவை தொடங்கி வைத்தார்.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மூலம் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ ஐடியா ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டு எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் உறுதுணையாய் இருந்த பேராசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ், திரு. ஸ்டார்ட்அப் டிஎன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 தொடக்க நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் கருப்புசாமி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு கோவை பிரிவின் துணை தலைவர் சிவகுமார், அஸோஸியேட் துணை தலைவர் பொன்னி, டீம் லீட் காயத்ரி மற்றும் கல்லூரியின் ஸ்பார்க் இன்குபேஷன் அறக்கட்டளையின் தலைவர் திருக்குறள்கனி மற்றும் டாக்டர் ரவீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
