பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளை போற்றும் விதமாக, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (15.9.2024) கோவை காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள், துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமைக்கழக நிர்வாகிகள்‌, ஐ.பி.எஃப். தொழிற்சங்க தலைவர் பார்த்தசாரதி,  பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், BLA 2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.