டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கும் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதோடு சி.ஆர்.ஐ பம்ப்ஸ் மற்றும் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி இடையே தொடர்ச்சியான அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கவும்,எதிர்கால பொறியாளர்களிடையே திறன் மேம்பாடு, புதுமை மற்றும் தொழில்துறை வளர்ச்சி மேலும் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிகழ்வில், டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி தேவி  பழனிசாமி,  சி.ஆர்.ஐ பம்ப்ஸ் மனித வளத்துறை துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டார்.