கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில், நாட்டின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதைத் தவிர, கண் அறுவைச் சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 7 வரை நடைபெறும் இலவச கண்பரிசோதனை முகாம் மூலம் பொதுமக்கள் கண் பராமரிப்பை இலவசமாக பெறலாம். இவற்றில் கண் மருத்துவப் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளில் 15 சதவீதம் தள்ளுபடியும், லேசிக் சிகிச்சையில் 25 சதவீதம் தள்ளுபடியும் மற்றும் ஆப்டிகல் பிரேம்களில் 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த இலவச மருத்துவ முகாமில் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுசூதன், கார்னியா மற்றும் ஒளிவிலகல் நிபுணர் டாக்டர் முகமது ஷாபாஸ், கண்புரை அறுவை நிபுணர், டாக்டர் மும்தாஜ், பொது கண் மருத்துவ நிபுணர் டாக்டர் பானுலட்சுமி ஆகிய நிபுணர்கள் சேவையளிக்க உள்ளனர்.

கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் பொதுக்கண் பராமரிப்பு, கண்புரை, குளுகோமா, விழித்திரை, லேசிக், கார்னியா மற்றும் குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்பதிவிற்காக 77369 05222 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.