டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு என்.ஜி‌.பி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை வகித்தார்.

கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, என்.ஜி‌.பி. கல்வி குழுமங்களின் அறங்காவலர்கள் டாக்டர் அருண் பழனிசாமி, மதுரா முன்னிலை வகித்தனர்.

4 8

சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருமானவரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கூறுகையில்: மாணவர்கள் படித்து முடித்துப் பெறும் பட்டமானது, சமூக மதிப்பீட்டை உருவாக்கும். ஆளுமையை எப்படி மெருக்கேற்றுவது என்பதை கல்வி நிறுவனம் தான் அடையாளப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

கல்லூரியின் தலைவர் நல்ல.ஜி.பழனிசாமி பேசுகையில்: மாணவர்களின் படைப்பாற்றல், பண்பாடு, நாகரீகம், நற்பண்புகள், கற்பனைத் திறனைத் தூண்டும் வகையில் அமைவது தான் மிகச்சிறந்த கல்வி நிறுவனம். “கற்கை நன்றே கற்கை நன்றே” எனும் முன்னோர் சொற்படி மாணவர்கள் அர்ப்பணிப்புடன் முழுமையான கல்வியைக் கற்று, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.

மொத்தம் 1992 இளங்கலை, முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். இளங்கலையில் 1479 மாணவர்களும், முதுகலையில் 431 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.

நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அதிகாரி  புவனேஷ்வரன், முதன்மைச் செயல் இயக்குநர் நடேசன், என்.ஜி‌.பி. கல்விக் குழுமங்களின் கல்விசார் இயக்குனர் முத்துசாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.