ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், வெள்ளிகிழமை (27.9.2024) “கலைஞர் 100” வினாடி வினா போட்டி வரதராஜபுரம், சாய் விவாஹா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச்‌ செயலாளர்‌ தளபதி முருகேசன் ஆகியோர் அறிவிப்பு.

இந்நிகழ்வில் கழக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், கழக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் மாலதி, கழக பிரச்சாரக்குழு செயலாளர் உமாமகேஸ்வரி, கழக மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளும் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், மாவட்ட, மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதுசமயம் இந்நிகழ்ச்சியில் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.